தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் – 2026
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 23.04.2026 அன்று நடைபெற்றது.
இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 04.05.2026 (திங்கட்கிழமை) அன்று 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற உள்ளது.
வாக்குகள் எண்ணும் வழிமுறைகள்:
வாக்குகள் எண்ணும் பணி காலை 8:00 மணிக்கு தொடங்கும்.
முதலில் காலை 8:00 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும்.
30 நிமிடங்களுக்கு பிறகு, காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
EVM வாக்கு எண்ணும் சுற்றுகளில், தபால் வாக்குகள் முடிக்கப்படாதிருந்தாலும் தொடர்ந்து எண்ணிக்கை நடைபெறும்.
ஒவ்வொரு சுற்றிலும் ஒரே நேரத்தில் தபால் மற்றும் EVM வாக்குகள் எண்ணப்படும்.
ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு எண்ணும் பணிகள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (ARO Level) மேற்பார்வையில் நடைபெறும்.
500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
தபால் வாக்குகள்:
தேர்தல் பணியில் ஈடுபட்ட மொத்தம் 3.60 இலட்சம் அலுவலர்களில், சுமார் 2.88 இலட்சம் (80%) பேர் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் Zonal/Sector பணியாளர்களுக்கு கூடுதலாக தபால் வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
மொத்தம் 3.36 இலட்சம் தேர்தல் அலுவலர்கள் மற்றும் 1.10 இலட்சம் அலுவலர்கள் தேர்தல் பணி சான்றிதழ் (Election Duty Certificate) மூலம் வாக்களித்துள்ளனர்.
85+ வயது மற்றும் மாற்றுத்திறனாளிகள் (Form 12D) மூலம் 1.73 இலட்சம் வாக்காளர்கள் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர்.
சேவை வாக்காளர்கள் (Service Voters) – 18,000 பேர் வாக்களித்துள்ளனர்.
இவ்வாக்குகளின் எண்ணிக்கை 04-05-2026 காலை 8:00 மணி முதல் தொடங்கும்.
மற்ற விவரங்கள்:
வாக்குச்சாவடிகளில் வாக்களித்த வாக்காளர்கள் மத்தியில், சுமார் 6.37 இலட்சம் வாக்காளர்களுக்கு வாக்காளர் ஏடுகள் வழங்கப்பட்டு, அவற்றின் அடிப்படையில் வாக்குகள் பெறப்பட்டுள்ளன.
“தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா”
அரசாணை பிறப்பித்தவர்:
தலைமைத் தேர்தல் அதிகாரி,
தமிழ்நாடு
வெளியீடு:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை – 9

No comments:
Post a Comment