18.4.2025 திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, ஆண்டார்குப்பத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை

0 MINNALKALVISEITHI

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (18.4.2025) திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, ஆண்டார்குப்பத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆற்றிய உரை.

திருவள்ளூர் மாவட்டத்தின் அரசு விழாவிற்கு தலைமையேற்றுள்ள மாண்புமிகு அமைச்சர் அருமை நண்பர் திரு. நாசர் அவர்களே,

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

திராவிட ஆழ்வார் திரு. ஜெகத்ரட்சகன் அவர்களே,

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய நாடாளுமன்றவாதியுமான திரு. சசிகாந்த் செந்தில் அவர்களே,

சட்டமன்ற உறுப்பினர்கள்

திரு. ராஜேந்திரன் அவர்களே,

திரு. கோவிந்தராஜன் அவர்களே,

திரு. கிருஷ்ணசாமி அவர்களே,

திரு. துரை சந்திரசேகர் அவர்களே,

திரு. சுதர்சனம் அவர்களே,

திரு. சந்திரன் அவர்களே,

திரு. கணபதி அவர்களே,

துவக்கத்தில் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்திருக்கக்கூடிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பிரதாப், இ.ஆ.ப., அவர்களே,

ஆவடி மாநகராட்சி மேயர் திரு. உதயகுமார் அவர்களே,

உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே,

அரசு உயர் அலுவலர்களே,

நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக வந்திருக்கக்கூடிய பயனாளிப் பெருமக்களே,

பத்திரிகை மற்றும் ஊடகத் துறையை சார்ந்திருக்கக்கூடிய நண்பர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

தமிழ்நாட்டின் நுழைவு வாயிலும், புனித ஜார்ஜ் கோட்டைக்கு கோட் பாதை அமைத்த மாவட்டமுமான இந்த திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்டிருக்கக்கூடிய பொன்னேரியில் நடைபெறக்கூடிய அரசு விழாவில் பங்கெடுத்து உரையாற்றுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த அரசு விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கின்ற மாவட்டத்தின் அமைச்சர், நான் வளர்த்த இளைஞர் அணியில் வளர்ந்த ஆருயிர் சகோதரர் மாண்புமிகு ஆவடி நாசர் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியர் திரு. பிரதாப், இ.ஆ.ப., அவர்களுக்கும், அவர்களுக்கு துணை நின்ற அரசு அலுவலர்கள் அத்தனை பேருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!

முதலில், என்னுடைய வருத்தத்தை நான் உங்களிடத்தில் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். காரணம் இந்த நிகழ்ச்சிக்கு நான் கொஞ்சம் தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறேன். அதற்கு நான் காரணம் அல்ல அதற்கு திரு. நாசர் தான் காரணம். வருகின்ற வழியெல்லாம் வரவேற்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, அவர் செய்த ஏற்பாடு மட்டுமல்ல, அதையும் தாண்டி, அதையும் மீறி, ஆங்காங்கே திரண்டிருந்து வரவேற்றிருக்கக்கூடிய நிகழ்ச்சிகளை எல்லாம் முடித்துவிட்டு இந்த இடத்திற்கு வந்து சேருவதற்கு தாமதமாகி விட்டது. தாமதமாக வந்த காரணத்தினால் தான், இங்கே வந்திருக்கக்கூடிய அனைவரும் பேச முடியாமல், அவர்கள் அத்தனை பேரின் சார்பில் நான் ஒருவனே பேசக்கூடிய வாய்ப்பைப் பெற்று, ஏற்கனவே காலங்கடந்து வந்திருக்கக்கூடிய நேரத்தில் நீங்கள் காத்திருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில், இன்னும் உங்கள் பொறுமையை சோதிக்க நான் விரும்பாத காரணத்தால், நான் ஒருவனே, அதுவும் சுருக்கமாக உங்களிடத்தில் உரையாற்ற கடமைப்பட்டிருக்கிறேன்.

தலைவர் கலைஞர்தான் 'நவீன தமிழ்நாட்டின் சிற்பி ! அதற்கு அடையாளமாக விளங்குகின்ற இடம்தான் இந்த திருவள்ளூர் மாவட்டமும், அதனுடைய சுற்றுப்புறங்களும்! எப்படி என்று கேட்கிறீர்களா!


பத்திரிகை மற்றும் ஊடகத் துறையை சார்ந்திருக்கக்கூடிய நண்பர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

தமிழ்நாட்டின் நுழைவு வாயிலும், புனித ஜார்ஜ் கோட்டைக்கு கோட் பாதை அமைத்த மாவட்டமுமான இந்த திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்டிருக்கக்கூடிய பொன்னேரியில் நடைபெறக்கூடிய அரசு விழாவில் பங்கெடுத்து உரையாற்றுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த அரசு விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கின்ற மாவட்டத்தின் அமைச்சர், நான் வளர்த்த இளைஞர் அணியில் வளர்ந்த ஆருயிர் சகோதரர் மாண்புமிகு ஆவடி நாசர் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியர் திரு. பிரதாப், இ.ஆ.ப., அவர்களுக்கும், அவர்களுக்கு துணை நின்ற அரசு அலுவலர்கள் அத்தனை பேருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!

முதலில், என்னுடைய வருத்தத்தை நான் உங்களிடத்தில் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். காரணம் இந்த நிகழ்ச்சிக்கு நான் கொஞ்சம் தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறேன். அதற்கு நான் காரணம் அல்ல அதற்கு திரு. நாசர் தான் காரணம். வருகின்ற வழியெல்லாம் வரவேற்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, அவர் செய்த ஏற்பாடு மட்டுமல்ல, அதையும் தாண்டி, அதையும் மீறி, ஆங்காங்கே திரண்டிருந்து வரவேற்றிருக்கக்கூடிய நிகழ்ச்சிகளை எல்லாம் முடித்துவிட்டு இந்த இடத்திற்கு வந்து சேருவதற்கு தாமதமாகி விட்டது. தாமதமாக வந்த காரணத்தினால் தான், இங்கே வந்திருக்கக்கூடிய அனைவரும் பேச முடியாமல், அவர்கள் அத்தனை பேரின் சார்பில் நான் ஒருவனே பேசக்கூடிய வாய்ப்பைப் பெற்று, ஏற்கனவே காலங்கடந்து வந்திருக்கக்கூடிய நேரத்தில் நீங்கள் காத்திருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில், இன்னும் உங்கள் பொறுமையை சோதிக்க நான் விரும்பாத காரணத்தால், நான் ஒருவனே, அதுவும் சுருக்கமாக உங்களிடத்தில் உரையாற்ற கடமைப்பட்டிருக்கிறேன்.

தலைவர் கலைஞர்தான் 'நவீன தமிழ்நாட்டின் சிற்பி ! அதற்கு அடையாளமாக விளங்குகின்ற இடம்தான் இந்த திருவள்ளூர் மாவட்டமும், அதனுடைய சுற்றுப்புறங்களும்! எப்படி என்று கேட்கிறீர்களா! கவரப்பேட்டை சத்தியவேடு சாலைப் பணிகள்

திருவள்ளூர் போகிறது. அரக்கோணம் சாலை நான்குவழிச் சாலை ஆகப்

60 சிறுபாலங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொன்னேரி - கவரப்பேட்டை இடையே ரயில்வே மேம்பாலம்

திருவள்ளூரில் அறிவுசார் நகரம்

திருத்தணி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படுகிறது.

சின்ன நொளம்பூரில், உயர்மட்டப் பாலம்

இந்து சமய அறநிலையத் துறை சார்பாக, 173 கோடி ரூபாயில் பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் திருப்பணிகள்

183 கோடி ரூபாயில் திருத்தணி சுப்பிரமணியசாமி கோயில் திருப்பணிகள்

52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் திருப்பணிகள்

18 கோடி ரூபாயில் சிறுவாபுரி பாலசுப்பிரமணியசாமி கோயில் திருப்பணிகள்

அம்பத்தூரில் தொழிலாளர் தங்கும் விடுதி

திருமழிசை துணைநகரத் திட்டம்

78 மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள்

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்தப் பட்டியலை வாங்கிப் பார்த்தபோது எனக்கே கொஞ்சம் மலைப்பாகதான் இருந்தது. அனைத்துத் திட்டங்களையும் திருவள்ளூருக்கே திருப்பி விட்டுவிட்டார்கள் என்று கூட நினைத்தேன். அமைச்சர் நாசர் அந்தளவுக்குத் தன் மாவட்டத்துக்கு திட்டங்களைக் கேட்டு, வாங்கி சாதனை படைத்திருக்கிறார். இதுபோல தான், இந்த மாவட்டம் மட்டும் இல்லை அனைத்து மாவட்டங்களுக்கும் பலப்பல திட்டங்களை இந்த திராவிட மாடல் ஆட்சியில் வழங்கிக் கொண்டு வருகிறோம். ஏற்கனவே இருந்த அ.தி.மு.க.வின் இருண்ட ஆட்சிக் காலத்தில் பத்தாண்டுகளாக முடங்கிக் கிடந்த உட்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகள் கடந்த நான்கு ஆண்டுகளாகதான் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இன்று 390 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு நான் அடிக்கல் நாட்டி இருக்கிறேன். இன்று திறந்து வைத்திருக்கின்ற திட்டங்களின் மொத்த மதிப்பு 418 கோடி ரூபாய்.

2 இலட்சத்து 2 ஆயிரத்து 531 பயனாளிகளுக்கு 357 கோடி ருபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறேன். அந்த வகையில், ஒட்டு மொத்தமாக கூட்டிப் பார்த்தால், 1,166 கோடி ரூபாய் மதிப்பிலான விழாவாக இது நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவது என்ன தெரியுமா? பல ஆண்டுகளாக இருந்த பிரச்சனை. அதை தீர்த்து அதிகமான அளவில் இன்றைக்கு மக்கள் பயனடைகின்ற வகையில் பட்டா வழங்குவது தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும், எவ்வளவு பேருக்கு இன்றைக்கு வழங்கப் போகிறேன் தெரியுமா? 63,124 பேருக்கு பட்டா வழங்கப் போகிறோம். நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இந்த அளவுக்கு அதிகமாக பட்டா வழங்குவது இந்த நிகழ்ச்சியில் தான்.

இதற்காக பாடுபட்டிருக்கக்கூடிய வருவாய் துறை, மாவட்ட நிர்வாகம் அனைவருக்கும் என்னுடைய ஸ்பெஷல் பாராட்டுக்கள் - என்னுடைய ஸ்பெஷல் வாழ்த்துகள். ஏனென்றல், மனிதனுடைய வாழ்க்கையில், வாழ்விடம் என்பது மிகவும் அத்தியாவசியமானது மிகவும் முக்கியமானது. அந்த உரிமையையும் கொடுப்பதுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு.

திருவள்ளூர் வந்த பிறகு உங்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யாமல் போகமுடியுமா? அதனால் புதிதாக 5 அறிவிப்புகளை நான் இந்த விழாவில் வெளிடப் போகிறேன்.

முதல் அறிவிப்பு

கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், தண்டலம் கசவநல்லாத்தூர் சாலையில், கூவம் ஆற்றின் குறுக்கே 20 கோடியே 37 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம் அமைக்கப்படும்.இரண்டாவது அறிவிப்பு

திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம், மணவூர் இலட்சுமி விலாசபுரம் சாலையில், கொசஸ்தலையாறு ஆற்றின் குறுக்கே, 23 கோடியே 47 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.

மூன்றாவது அறிவிப்பு

திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், காக்களூர் ஊராட்சியில், தாமரைக்குளம் மேம்படுத்தும் பணிகள், காக்களூர் ஏரி மேம்படுத்தும் பணிகள் 2 கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் "நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் அது மேற்கொள்ளப்படும்.

நான்காவது அறிவிப்பு

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய உப்புத்தர நில ஏரியான பழவேற்காடு ஏரி, பறவைகளுக்கான முக்கிய வாழ்விடமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த ஏரிப் பகுதியில், சூழலியல் சுற்றுலா வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், இங்கே இருக்கின்ற வைரவன்குப்பம் மீனவ கிராமத்தில், மீனவர்களின் பயன்பாட்டுக்காக வலை பின்னும் கூடம் அமைத்துத் தரப்படும்.

இறுதியாக, மிக முக்கியமான ஐந்தாவது அறிவிப்பு

வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கின்ற திருமழிசை ஊத்துக்கோட்டை சாலையில், 51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்.

இதுபோல, நம்முடைய அரசின் அக்கறையான நிர்வாகத்தால், அனைத்துத் துறையும் இன்றைக்கு வளர்ந்து கொண்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் வளர்கிறார்கள். அதனால்தான், தமிழ்நாடு அனைத்து வகையிலும் வளர்ச்சி அடைகிறது.

தமிழ்நாடு அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய திட்டங்களால் தமிழ்நாட்டில் மாபெரும் சமூகப் புரட்சி நடைபெற்று வருகிறது. நீங்கள் பார்க்கிறீர்கள்.மகளிருக்கு வழங்குகின்ற ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தினை அவர்களுக்கு அளித்து, அவர்கள் தன்னம்பிக்கையை உயர்த்தியிருக்கிறது.

இன்றைக்க என்ன சொல்கிறார்கள் அந்த பேருந்தை பார்த்து, ஸ்டாலின் பேருந்து என்று நீங்கள் அன்போடு கூப்பிடுகின்ற அந்த விடியல் பயணம் திட்டத்தால், பெண்கள் மேற்கொள்ளுகின்ற பேருந்து பயணங்கள் அதிகரித்திருக்கிறது. அது மட்டுமா....

காலையில் பசியுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள் இப்போது சூடான, சுவையான ஊட்டச்சத்து உணவை காலை உணவுத் திட்டத்தில் சாப்பிடுகிறார்கள். இதனால், அவர்கள் வருகை அதிகரித்திருக்கிறது. தாய்மார்கள் பணிச்சுமை குறைந்திருக்கிறது.

குழந்தைகள் சத்துக் குறைபாட்டைப் போக்குவதற்கு, கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்.

அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருகின்ற புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலமாக அரசுப் பள்ளி மாணவர்கள் கல்லூரியில் சேருவது கடந்த 3 ஆண்டுகளில், 30 விழுக்காடு அதிகரித்திருக்கிறது.

தொழிற்சாலைகள் இல்லாத மாவட்டங்களே இல்லை என்று சொல்கின்ற அளவுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகளை நிறுவிக் கொண்டிருக்கிறோம்.!

தொழிற்சாலை நிறுவுவது மட்டுமல்ல, அந்த நிறுவனங்களில் பணிபுரிவதற்கு ஏற்ற திறன்மிக்க இளைஞர்களை உருவாக்க நான் முதல்வன் போன்ற திட்டங்கள் தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கியிருக்கிறோம்!

வளமான தமிழ்நாடாக மட்டுமல்ல, நலமான தமிழ்நாடாகவும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 இது போன்ற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.இதுபோல, நாட்டுக்கே முன்னோடியாக பல முற்போக்குத் திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு செய்து கொண்டு வருகிறது.

இப்போது சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள் பத்திரிகையிலும் படித்திருப்பீர்கள். விளிம்பு நிலை மக்களுக்கு நம்முடைய அரசு அதிகாரம் வழங்குகிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் போட்டியிடாமல், நேரடியாக உறுப்பினராக ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். இதனால், தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுடைய குரல் ஒலிக்கப் போகிறது.

இதுபோல, நம்முடைய ஆட்சியில் தன்னம்பிக்கையும் வளர்ந்திருக்கிறது! தமிழ்நாடும் வளர்ந்திருக்கிறது! இதைத்தான் சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை! ஆட்சியின் மேல் நியாயமாக எந்தக் குறையும் சொல்ல முடியாமல், இப்போது அவதூறு பரப்பிக் கொண்டு வருகிறார்கள். சட்டம் ஒழுங்கு, அரசு நிர்வாகம் என்று அனைத்திலும், தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது. அனைத்துத் தரவுகள், தரவரிசைகளிலும் தெளிவாக இன்றைக்கு நாம் அதை பார்க்கிறோம்.

ஆனால், தமிழ்நாட்டில் இருக்கின்ற சில எதிர்க்கட்சிகள், பொறுப்பான எதிர்க்கட்சிகளாக நடந்து கொள்ளாமல், தமிழ்நாட்டுக்கே எதிரிக்கட்சிகள் மாதிரி செயல்படுகிறார்கள். அவர்கள் எண்ணம் என்ன? தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் இழைக்கக் கூடிய கூட்டத்துடன் உறவாடி தமிழ்நாட்டையே அடகு வைக்கவேண்டும். இதுதான் அந்த சந்தர்ப்பவாதிகளின் ஒரே எண்ணமாக இருக்கிறது! தி.மு.க.வை பொறுத்தவரைக்கும்

நீட் தேர்வை எதிர்ப்பதாக இருந்தாலும்

மும்மொழித் திட்டத்தை நிராகரிப்பதாக இருந்தாலும்

வக்ஃபு சட்டத்தை எதிர்ப்பதாக இருந்தாலும் -

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக பாதிப்படைகின்ற மாநிலங்களை ஒன்று திரட்டுவதாக இருந்தாலும், நாம் தான் இந்திய அளவில் வலுவாக ஓங்கி குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்! மாநில உரிமையின் அகில இந்திய முகமாக தி.மு.க.தான் இருக்கிறது!

சமீபத்தில், சென்னை வந்திருந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், நாம் கேட்பதற்கெல்லாம் பதில் சொல்லாமல், திசை திருப்புவதற்காக இதையெல்லாம் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று பேசினார். அதாவது இதையெல்லாம் பேசி, நாம் திசை திருப்புகிறோம் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். நான் சொல்ல விரும்புவது, இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துதான் தமிழ்நாடு போராடுகிறது.

மாநிலங்களின் உரிமைகளை கேட்பது தவறா? நீங்கள் எதையும் செய்யாத காரணத்தினால் தான் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரைக்கும் சென்று நாம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்றோம். தி.மு.க-வின் 'பவர்' என்ன என்று தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, இப்போது இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது. இதுதான் தி.மு.க-வின் பவர். உண்மை இப்படி இருக்கும்போது, திசை மாறி சென்று கொண்டிருப்பவர்கள், திசை காட்டிகளாக இருக்கின்ற எங்களை பார்த்து திசை திருப்புகிறோம் என்று புலம்ப வேண்டாம்... நான் கேட்கிறேன்.. மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களே... “நீட் தேர்வில் விலக்கு தருவோம்” என்று உங்களால் சொல்ல முடியுமா? “இந்தியை திணிக்க மாட்டோம்” என்று உங்களால் உறுதியளிக்க முடியுமா? “தமிழ்நாட்டிற்கு இவ்வளவு சிறப்பு நிதியை கொடுத்திருக்கிறோம்” என்று பட்டியலிட முடியுமா? “தொகுதி மறுசீரமைப்பால், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையாது” என்று வாக்குறுதி கொடுக்க முடியுமா? நாங்கள் செய்வது திசைதிருப்புவது என்றால், இதற்கெல்லாம் தெளிவான பதிலை தமிழ்நாட்டு மக்களுக்கு ஏன் நீங்கள் கொடுக்கவில்லை.

அடுத்து, சிறிது நாட்களுக்கு முன்னால், தமிழ்நாட்டுக்கு நம்முடைய மாண்புமிகு பிரதமர் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்திற்கு வந்தார்கள், பாலத்தை திறந்து வைப்பதற்கு வந்தார்கள். வரட்டும். அதை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், அங்கே என்ன பேசிவிட்டு போனார்? “எவ்வளவு கொடுத்தாலும் இங்கே அழுகிறார்கள்” எவ்வளவு நிதி கொடுத்தாலும் நாம் அழுகிறோமாம் என்று பேசிவிட்டுப் போயிருக்கிறார். நான் மிகுந்த அடக்கத்தோடு, மரியாதையோடு மாண்புமிகு பிரதமருக்கு நினைவுபடுத்த விரும்புவது, “ஒன்றிய அரசிடம் கையேந்தி நிற்க, மாநிலங்கள் பிச்சைக்காரர்களா என்ன?” யார் கேட்டது. நீங்கள் கேட்டது? அதனால் தான் நினைவுபடுத்துகிறேன். நீங்கள் பேசியது என்ன? குஜராத் முதலமைச்சராக திரு. மோடி அவர்கள் இருந்தபோது, "ஆளுநர்கள் மூலம் தனி ராஜாங்கம் செய்கிறார்கள்" எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது என்று புகார் சொன்னார். யார் திரு. மோடி அவர்கள். இப்போது நாங்கள் கேட்டால் மட்டும் அழுகிறார்கள் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? நான் கேட்பது அழுகை இல்லை; அது தமிழ்நாட்டின் உரிமை! நான் அழுது புலம்புவனும் இல்லை! ஊர்ந்து போய் யார் காலிலும் விழுகிறவனும் இல்லை. உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் நமக்கு யார் கற்றுக் கொடுத்தது? -யார் நமக்கு சொல்லிக் கொடுத்தது நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அவருடைய வழித்தடத்தில் பயணிக்கின்றவன் நான்!

அதற்கு அடையாளம்தான், இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்யாத வகையில், நீதியரசர் திரு. குரியன் ஜோசப் தலைமையில், நாங்கள் அமைத்திருக்கின்ற மாநில சுயாட்சிக் குழு! எப்படி தலைவர் கலைஞர் அவர்கள் ஆகஸ்ட் 15 விடுதலை நாளன்று மாநில முதலமைச்சர்கள் எல்லாம் தேசிய கொடியை ஏற்றுகின்ற உரிமையை அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் பெற்றுத் தந்தாரோ, அதுபோல, இந்த குழுவின் மூலமாக அனைத்து மாநிலங்களின் நியாயமான உரிமையையும் நாங்கள் பெற்றுத் தருவோம்!

மாநிலங்கள் சுயாட்சி பெற்றவையாக இருந்தால் தான், இங்கே உள்ள மக்களுக்குத் தேவையானவற்றை செய்ய முடியும். இதைத்தான் நான் சட்டமன்றத்தில் சொன்னேன், “ஒரு தாய்க்கு தான் தன் குழந்தைக்கு என்ன தேவை என்று தெரியும். தன் குழந்தைக்கு என்ன கொடுக்கவேண்டும் என்று எங்கேயோ டெல்லியில் இருப்பவர்கள் தீர்மானித்தால், அந்த தாய் பொங்கி எழுவாள்” என்று சட்டமன்றத்திலும் பதிவு செய்தேன்.

ஒன்றிய பா.ஜ.க. அரசு எல்லா வகையிலேயும் நமக்கு தடையை ஏற்படுத்துகிறார்கள், எப்படியெல்லாம் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு குடைச்சல் கொடுக்க முடியும் என்று யோசித்து அனைத்து ரூபத்திலேயும் அதை செய்கிறார்கள். ஆனால், இது எல்லாவற்றையும் மீறி, ஒன்றிய அரசே வெளியிடுகின்ற அனைத்து தரவரிசையிலும், அனைத்து புள்ளி விவரங்களிலும் நம்முடைய தமிழ்நாடு தான் முதன்மை இடத்தை மீண்டும் மீண்டும் பிடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் என்ன? நம்முடைய திறமையான நிர்வாகம்! இத்தனை இடர்பாடுகளை நீங்கள் உருவாக்கும்போதே நாங்கள் இந்த அளவு சிறப்பாக செயல்படுகிறோம் என்றால், எங்களை வஞ்சிக்காமல் தமிழ்நாட்டிற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை கொடுத்தால், எங்கள் உரிமைகளில் தலையிடாமல் இருந்தால், எங்களால் இன்னும் பல மடங்கு சிறப்பாக செயல்பட முடியும்! நீங்கள் செய்யவில்லை என்றால், நீங்கள் ஏற்படுத்துகின்ற தடைகளை எல்லாம் ஒவ்வொன்றாக சட்டபூர்வமாக உடைத்தெறிவோம்!

அதுமட்டுமல்ல, தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் நம்பர்-1 மாநிலமாக மாற்றுவதற்கு நாங்கள் உழைத்துக் கொண்டே தான் இருப்போம். இதனால் தான் தமிழ்நாடு மட்டும் எப்படி தனித்துவமாக இருக்கலாம் என்று நினைத்து ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள் 2026-ல் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று நாடாளுமன்றத்தில் பேசுகிறார். தமிழ்நாட்டிற்கு வந்து அதை சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். நான் அவருக்கு சவாலாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் - டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்குமே அடிபணியாது. அப்படி ஒரு தனி குணம், ஒரு தனித் தன்மை கொண்டவர்கள் நாங்கள். மற்ற மாநிலங்களுக்குச் சென்று அங்கே உள்ள கட்சிகளை உடைத்து, ரெய்டு மூலமாக மிரட்டி, ஆட்சி அமைக்கின்ற உங்களுடைய ஃபார்முலா இங்கே தமிழ்நாட்டில் வேலைக்கு ஆகாது. நீங்கள் ஏமாற வேண்டாம். 2026-ல் திராவிட மாடல் ஆட்சி தான். எங்களுடைய தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு out of control தான். இங்கே இருக்கக்கூடியவர்கள் சிலரை மிரட்டி, கூட்டணி வைத்துக் கொண்ட நீங்கள் ஜெயிக்க முடியுமா? உங்கள் பரிவாரங்கள் எல்லோரையும் சேர்த்துக் கொண்டு வாருங்கள். ஒரு கை பார்ப்போம்.

நான் கேட்பது தமிழர்களை எப்படியெல்லாம் நீங்கள் கொச்சைப்படுத்தினீர்கள். அண்மையில் கூட ஒன்றிய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்கள் தமிழர்களை நாகரீகம் இல்லாதவர்கள் என்று சொல்லிவிட்டு மன்னிப்பு கேட்டாரே. அதற்கு முன்னால் இன்னொரு ஒன்றிய அமைச்சர், தமிழர்கள் வெடிகுண்ட வைப்பவர்கள் என்று சொல்லி பிறகு மன்னிப்புக் கேட்டார். நீங்கள் ஒடிசாவில் பேசினீர்களே, பூரி ஜெகந்நாத் கோயிலின் கருவூல சாவியை திருடி தமிழ்நாட்டில் வைத்திருக்கிறார்கள் என்று நீங்களும், பிரதமரும் ஒடிசாவிற்கு சென்று பேசினீர்கள்! தமிழ்நாட்டைச் சார்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் ஒடிசா மாநில முதலமைச்சரிடம் இருக்கிறார் என்பதற்காக, ஒரு தமிழர் ஒடிசாவை ஆளாலாமா? என்று கேட்டு பிரித்தாளும் சூழ்ச்சியை நடத்தினீர்களே! அதுபோல, இங்கே செய்ய முடியாது. இங்கே நீங்கள் தன்மானமும், தமிழினமானமும் இல்லாத கொத்தடிமைகளின் துரோகக் கூட்டணியில் சேர்ந்து தமிழ்நாட்டை ஆள நினைக்கிறீர்கள். கொஞ்சம் வரலாற்றை எடுத்துப் பாருங்கள். சுய மரியாதையும், மானமும், வீரமும், விவேகமும், நல்லிணக்கமும் உள்ள மண் எங்கள் தமிழ் மண். ஆதிக்கத்தையும், ஆக்கிரமைப்பையும் எந்த காலத்திலும் அனுமதிக்காத மானமுள்ள மண் இந்த தமிழ் மண். தேர்தலுக்குள் அடுத்த ஒராண்டில் நீங்கள் எப்படியெல்லாம் ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டுவீர்கள் என்று எங்களுக்கு தெரியும். ஏன் நாட்டு மக்களுக்கே நன்றாக தெரியும். நாங்கள் இந்த உருட்டல், மிரட்டல்களுக்க எல்லாம் அடிபணிகின்ற அடிமைகள் அல்ல. அமித்ஷா அல்ல எந்த ஷா-வாக இருந்தாலும் சொல்கிறேன் - இங்கே ஆளமுடியாது. இது தமிழ்நாடு. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும்வரை உங்கள் திட்டம் பலிக்காது.

தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! விடைபெறுகிறேன்!

நன்றி, வணக்கம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.