பழங்குடியினர் மற்றும் பிற மரபு வழியாக வனங்களில்
குடியிருப்போரின் உரிமைகளை அங்கீகரிக்கும் பொருட்டு ஒன்றிய அரசால் பழங்குடியினர்
மற்றும் பிற மரபு வழியாக வனங்களில் குடியிருப்போர் (வன உரிமைகளை அங்கீகரித்தல்)
சட்டம். 2006 இயற்றப்பட்டு பழங்குடியினர் குடியிருக்கும் வன நிலங்களுக்கு புவியியல்
தரவின் அடிப்படையில், தனி நபர் உரிமைகள் மற்றும் சமூக உரிமைகள் ஆகிய மாவட்ட ஆட்சித்
தலைவரால் வழங்கப்படுகின்றன. இதன்படி, 06.02.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாலை
05.30 மணி வரை சென்னை தலைமைச் செயலகத்தில் வன உரிமைச் சட்டத்தில் தனி நபர் உரிமைகள்
மற்றும் சமூக உரிமைகள் வழங்குவது உட்பட அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக,
மாவட்ட வன அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல
அலுவலர்களுக்கு மாநில அளவிலான திறன் வளர்ப்புப் பயிற்சி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், வன உரிமைச் சட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணைகள்,
சுற்றாணைகள் மற்றும் விதிகள் அடங்கிய தொகுப்பு புத்தகம் தலைமைச் செயலாளர் அவர்களால்
வெளியிடப்பட்டது. இத்திறன் வளர்ப்புப் பயிற்சியில், பேராசியர் அகிலா பிகாரி ஒடா.
இ.ஆ.ப., (ພໍ), Advisor to President of India on Tribal Museum, Senior Advisor
UNICEF, திருமதி. ஷோமோனா கண்ணா, Advocate. Supreme Court of India and Former Legal
Consultant to MoTA, Government of India, S. . Knowledge Partner. Tamil Nadu &
Executive Director, Vasundhara, Odisha, . ω, Director, Samanvaya, ஆகியோர்
கலந்துகொண்டு மாவட்ட வன அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும்
பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கினர்.மேலும், வன உரிமைச் சட்டம்,
2006-ன்கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள வெவ்வேறு வகையான உரிமைகள், இச்சட்டத்தில் உள்ள
பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இச்சட்டத்தை
நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்
நலத்துறை முதற்கட்டமாக, பழங்குடியினர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களை உள்ளடக்கிய
வரைபடம் (FRA Atlas). தகவல் தொழில்நுட்ப வலைதளம் (FRA IT Portal) மற்றும்
மாநிலத்தில் இதற்கென வன உரிமைப் பிரிவுகள் (FR Cell) உருவாக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., தலைமைச்
செயலாளர். மருத்துவர் P. செந்தில் குமார். இ.ஆ.ப. அரசு முதன்மைச் செயலாளர்,
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, திருமதி க. லட்சுமி பிரியா.
இ.ஆ.ப., அரசு செயலாளர், ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை, திரு. S.
அண்ணாதுரை, ம.தொ.ப., இயக்குநர். பழங்குடியினர் நலத்துறை மற்றும் திருமதி. இரா. உமா
மகேஸ்வரி, அரசு கூடுதல் செயலாளர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.