டங்ஸ்டன் சுரங்கம் - முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பொதுமக்கள் நன்றி

0 MINNALKALVISEITHI
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல உரிமையை இரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி, வள்ளாலபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நன்றி 

மதுரை மாவட்டம், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையவுள்ளதாகவும், அதற்கான ஏல உரிமையை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு அறிவித்தது. இதற்கு தமிழ்நாடு அரசும், அப்பகுதி கிராம மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாபட்டி பாதிக்கப்படும் என்று கூறி மதுரை மாவட்டத்தில் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 9.12.2024 அன்று மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக இரத்து செய்திடவும், மாநில அரசுகளின் அனுமதியின்றி எந்தச் சுரங்க உரிமத்தையும் வழங்கக் கூடாது என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தி அரசினர் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

 இந்த தனித் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், "எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டிற்குள் ஒன்றிய அரசால் போடப்படக்கூடிய இந்தத் திட்டம், நிச்சயம் வரக்கூடிய வாய்ப்பு இருக்காது, அதைத் தடுத்து நிறுத்துவோம். அப்படி ஒரு சூழல் வந்தால் முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன்" என்று இத்திட்டம் இரத்து செய்யப்பட காரணமாக இருந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நேற்று (25.1.2024) தலைமைச் செயலகத்தில் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம் பட்டி. நாயக்கர்பட்டி, செட்டியார்பட்டி. தெற்கு தெரு. மீனாட்சிபுரம், மாங்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் சந்தித்து, தங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர். 

இன்றையதினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் (26.1.2025) குடியரசு நாள் விழா முடிவுற்ற பின்னர் சென்னையிருந்து மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார். மதுரையிலிருந்து அரிட்டாபட்டிக்கு சாலை மார்க்கமாக சென்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

அப்போது பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தன்னை வரவேற்க காத்திருந்த பொதுமக்களில் தம்பதியர் ஒருவரின் ஆண் குழந்தைக்கு "வெற்றி" என்றும், மற்றொரு தம்பதியரின் பெண் குழந்தைக்கு "திராவிட செல்வி" என்றும் பெயர் சூட்டினார். முதலாவதாக அரிட்டாபட்டி கிராமத்திற்கு சென்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அக்கிராம முக்கிய பிரமுகர்கள் பொன்னாடை அணிவித்து, உற்சாக வரவேற்பு அளித்தனர். 

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல உரிமையை இரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி, திட்டத்தை இரத்து செய்ய உறுதியான நடவடிக்கை எடுத்தமைக்காக கிராம மக்கள் தங்களது நன்றியினை மாண்புமிகு தமிழ்நாடு கொண்டனர். முதலமைச்சர் நெஞ்சார்ந்த அவர்களுக்கு தெரிவித்துக் அப்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அக்கிராம மக்களிடம் ஆற்றிய உரை: உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம். நான் திடீரென் இரத்து டங்ஸ்டன் சுரங்கம் திட்டம் முழுமையாக செய்யப்பட்டிருக்கிறது என்று ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டதற்கு எப்படிப்பட்ட அழுத்தத்தை இந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய மக்கள் தந்தார்கள் என்பதெல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும். அதை உணர்ந்து உங்களால் உருவாக்கப்பட்ட திராவிட மாடல் ஆட்சி, அதாவது உங்களுடைய நம்பிக்கை பெற்றிருக்கக்கூடிய உங்களில் ஒருவனாக இருக்கக்கூடிய இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய ஆட்சியில், நாடாளுமன்றத்தில் நம்முடைய கூட்டணியில் உள்ள எம்.பிக்கள் எல்லோரும் பேசி, அதற்குப் பிறகு சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி அது இன்றைக்கு நாம் நினைத்ததுபோல வெற்றியடைந்திருக்கிறது. 

அந்த தீர்மானத்தை நிறைவேற்றுகின்ற நேரத்தில், அது அதிமுக கட்சியாக இருந்தாலும் சரி. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய முஸ்லீம் லீக் போன்ற எல்லா கட்சிகளும் சட்டமன்றத்தில் ஒன்று சேர்ந்து அந்த தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றிக் கொடுத்தார்கள். 

அப்படி நிறைவேற்றிக் கொடுத்த நேரத்தில் நான் தெளிவாக சொன்னேன். மக்களால் இன்றைக்கு ஆட்சியில் முதலமைச்சர் பொறுப்பில் இருக்கின்றவரைக்கும் நிச்சயமாக டங்ஸ்டன் திட்டம் வராது. அதைப்பற்றி அவசியமில்லை என்பதை இருக்கக்கூடிய மக்கள் நான் கவலைப்பட இந்த வேண்டிய அழுத்தந்திருத்தமாக நான் எடுத்துச் சொன்னேன். அதுமட்டுமல்ல, அப்படி ஒருவேளை வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால், நான் பதவியில் இருக்கமாட்டேன் என்று அதையும் சொன்னேன். ஆனால், அதற்காக நேற்றைக்கு என்னை சந்தித்த இந்தப் பகுதியில் உள்ள பெரியவர்கள் எல்லாம் பாராட்டு நிகழ்ச்சி நடத்தவேண்டும். 

உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும் என்று அழைத்தார் உங்களுடைய அன்பான முகத்தைப் பார்க்கும்போது, உங்களுடைய எழுச்சியான முகத்தைப் பார்க்கும்போது, இங்கே சிரித்த முகத்தோடு, புன்முறுவலோடு உங்களை பார்க்கின்றபோது உங்களோடு நீண்ட நேரம் பேசவேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. ஆனால், மற்றொரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அதற்குப்பிறகு விமானத்தைப் பிடித்து சென்னைக்கு செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. நாளைக்கு வேறொரு மாவட்டத்திற்கு செல்லவேண்டும். அதனால், நீண்ட நேரம் பேசமுடியாது. அதற்காக என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு. மீண்டும் ஒருமுறை உங்களையெல்லாம் சந்திக்க வருவோம். இன்னும் ஒன்றரை வருடத்தில் தேர்தல் வரயிருக்கிறது. அதுவும் உங்களுக்குத் தெரியும். 

அந்த தேர்தலில் நீங்கள் எல்லாம் என்ன முடிவோடு இருக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். எது எப்படியிருந்தாலும், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். எங்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள். ஆகவே, எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள். இது கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி. அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி. தந்தை பெரியார் அவர்கள் வழியோடு நடைபெறக்கூடிய ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி. உங்கள் வீட்டுப் பிள்ளை; உங்களில் ஒருவனாக இருக்கக்கூடிய இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய ஆட்சி என்பதை மாத்திரம் மனதில் வைத்துக் கொண்டு, என்றைக்குக்கும் நீங்கள் ஆதரவு தாருங்கள். 

உங்களுக்குப் பக்கபலமாக என்றைக்கும் நாங்கள் இருப்போம், இருப்போம் என்று கூறி, நன்றி கூறி, விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம் அதனைத் தொடர்ந்து, வள்ளாலபட்டி கிராமத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அக்கிராம முக்கிய பிரமுகர்கள் பொன்னாடை அணிவித்து, உற்சாக வரவேற்பு அளித்தனர். 

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான  இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. இ. பெரியசாமி, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. கே.ஆர். பெரியகருப்பன். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி, மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி. மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. கோ. தளபதி, திரு. ஆ. வெங்கடேசன். திரு. எம். பூமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. எம்.எஸ். சங்கீதா, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.