இளநிலை பகுப்பாய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 31 நபர்களுக்கு பணிநியமன ஆணை

0 MINNALKALVISEITHI
தமிழ்நாடு அரசின் அவசரகால ஊர்திகளின் சேவைகளை மேன்மைபடுத்தும் விதமாக ரூ.30.29 கோடி மதிப்பில் 147 அவசரகால ஊர்திகளின் சேவைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து, இளநிலை பகுப்பாய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 31 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (4.2.2025) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அவசரகால ஊர்தி சேவைகளை மேலும் செம்மையாக செயல்படுத்தும் வகையில், 72 புதிய "108" அவசரகால ஊர்திகள், மலை மற்றும் நிலப்பரப்பு பகுதிகளுக்கான 4 புதிய நான்கு சக்கர அவசரகால ஊர்திகள், 31 புதிய இலவச அமரர் ஊர்திகள் மற்றும் 36 புதிய இலவச தாய்சேய் நல ஊர்திகள், என மொத்தம் 29 கோடியே 15 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய் செலவில் 143 ஊர்திகளின் சேவைகளையும், தமிழக கேபிள் டிவி கம்யூனிகேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் 1 கோடியே 12 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய 4 புதிய அவசர கால ஊர்திகளின் சேவைகளையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 மேலும், உணவு பாதுகாப்புத் துறையில் இளநிலை பகுப்பாய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 31 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார். 108" அவசரகால ஊர்தி சேவைகள் 108' அவசரகால ஊர்தி சேவையானது 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசானது EMRI GHS நிறுவனத்தின் மூலம் '108' அவசரகால சேவையை வழங்கி வருகிறது. பொதுமக்கள் அவசரகால மருத்துவ தேவைக்கு "108" என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு 24x7 மணி நேரமும் இலவசமாக பயன்பெற்று வருகின்றனர். 

மருத்துவ அவசரகால நெருக்கடியின் போது தேவையான மருத்துவ உதவியை இலகுவாகவும், உடனடியாகவும் பொதுமக்கள் பெற்று பயன்பெறும் வகையில் தற்போது 1,353 எண்ணிக்கையிலான 108' அவசரகால ஊர்திகள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் 981 அடிப்படை வசதி கொண்ட அவசரகால ஊர்திகள், 303 மேம்படுத்தப்பட்ட அவசரகால2 ஊர்திகள், 65 பச்சிளங்குழந்தைகளுக்கான ஊர்திகள். 4 முக்கிய பிரமுகர்களுக்கான ஊர்திகளும் அடங்கும். 7.05.2021 முதல் ஜனவரி 2025 வரை இத்திட்டத்தில் 18,25,880 கருவுற்ற தாய்மார்கள். 12,18,014 சாலை விபத்துகளில் காயமுற்றோர்.

 42,14,687 இதர அவசர கால மருத்துவ தேவைகள், என மொத்தம் 72,58,581 நபர்கள் பயன்பெற்றுள்ளனர். இதனைத் தவிர. 41 இருசக்கர அவசரகால ஊர்திகள் மூலம் 1,42,649 பயனாளிகளும், பச்சிளங்குழந்தைகளுக்கான சேவை மூலம் 82,098 பயனாளிகளும், பழங்குடியினர் பகுதிகளில் வசிக்கும் 3,69,573 பயனாளிகளும் பயனடைந்துள்ளனர். இலவச அமரர் ஊர்தி சேவை அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் இறக்க நேரிட்டால், அவர்கள் உடலை தமிழ்நாட்டில் உள்ள எந்த பகுதிக்கும் இலவசமாக அவர்களின் இருப்பிடத்திற்கோ அல்லது இடுகாட்டிற்கோ இலவச அமரர் ஊர்தி மூலம் கொண்டு செல்லப்படுகிறது. 

இச்சேவை 155377' என்ற தொலைபேசியின் மூலம் இலவசமாக 24 மணி நேரமும் வழங்கப்படுகிறது. இச்சேவையின் மூலம் விபத்து. இயற்கை பேரிடர் மற்றும் பேரழிவு காலங்களில் இறந்தோரது உடல்கள் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்படுவதோடு, அதன் பின்னர் அவர்களின் இல்லத்திற்கும் கொண்டு சேர்க்கப்படுகிறது. இச்சேவை மூலம் 7.05.2021 முதல் ஜனவரி 2025 வரை 5,89,375 இறந்தோரது உடல்கள் இலவசமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. தற்போது தமிழ்நாடு முழுவதும் 195 ஊர்திகள் இச்சேவையின் கீழ் இயக்கப்படுகிறது. 102' - இலவச தாய்சேய் நல ஊர்தி சேவை 102' இலவச தாய்சேய் நல ஊர்தி மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள் சேவையானது. 

அரசு இலவசமாக அவர்கள் இல்லத்திற்கு கொண்டு சேர்க்கும் சேவையாகும். 7.05.2021 முதல் ஜனவரி 2025 வரை 9,48,715 தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இச்சேவையை பயன்படுத்தியுள்ளனர்.

 தமிழ்நாடு முழுவதும் தற்போது 109 இலவச தாய்சேய் நல ஊர்திகள் இயங்கி வருகின்றன.புதிய அவசரகால ஊர்தி சேவை, இலவச அமரர் ஊர்தி மற்றும் இலவச தாய்சேய் நல ஊர்தி சேவைகளை தொடங்கி வைத்தல் தமிழ்நாடு அரசின் அவசரகால ஊர்திகளின் சேவையை மேலும் செம்மையாக மேம்படுத்திடும் வகையில் 72 புதிய அடிப்படை வசதி கொண்ட அவசரகால ஊர்திகள், மலை மற்றும் நிலப்பரப்பு பகுதிகளுக்கான 4 எண்ணிக்கையிலான நான்கு சக்கர அவசரகால ஊர்திகள், 31 புதிய இலவச அமரர் ஊர்திகள் மற்றும் 36 புதிய இலவச தாய்சேய் நல ஊர்திகள், என மொத்தம் 29 கோடியே 15 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய் செலவில் 143 எண்ணிக்கையிலான ஊர்திகளின் சேவையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் கொடியசைத்து வைத்தார். 

தொடங்கி இந்த அவசரகால சேவைகள் அனைத்தையும் சீரிய முறையில் செயல்படுத்திட 4 கோடியே 70 இலட்சத்து 93 ஆயிரத்து 745 ரூபாய் செலவில் மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழக கேபிள் டிவி கம்யூனிகேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் 1 கோடியே 12 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய 4 புதிய அவசர கால ஊர்திகளையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இவ்வரசு பொறுப்பேற்றது முதல் இதுநாள்வரை 121.58 கோடி ரூபாய் செலவில் 515 மருத்துவச் சேவைக்கான அவசரகால ஊர்திகள் வழங்கப்பட்டுள்ளது. உணவு பகுப்பாய்வு கூடங்களில் இளநிலை பகுப்பாய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 31 ஆணைகள் வழங்குதல் நபர்களுக்கு பணி நியமன தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையானது தரமான, பாதுகாப்பான உணவு பொது மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யும் விதத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

 தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை ஆகிய ஆறு இடங்களில் உணவு பகுப்பாய்வு கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த உணவு பகுப்பாய்வு கூடங்கள் மூலமாக4 தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு அலுவலர்களால் எடுக்கப்படும் உணவு மாதிரிகளின் தரம் குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. மேற்கண்ட அனைத்து உணவு பகுப்பாய்வகங்களும், அளவுத் திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் (National Accreditation Board for Testing and Calibration Laboratories) மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு (Food Safety and Standards Authority of India) ஆகியவற்றால் வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழை பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

ஒவ்வொரு உணவு பகுப்பாய்வகத்திலும் ஓர் ஆண்டிற்கு சுமார் 6000 உணவு மாதிரிகள், என ஆறு உணவு பகுப்பாய்வு கூடங்களில் மொத்தம் 36,000 உணவு மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. உணவு பொருள்களின் தரம் குறித்த பகுப்பாய்வு அறிக்கையானது சம்மந்தப்பட்ட மாவட்ட நியமன அலுவலர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்பட்டு வருகிறது. 

இதில் இளநிலை பகுப்பாய்வாளர்களின் பணியானது உணவு பாதுகாப்பு அலுவலர்களால் எடுக்கப்படும் உணவு மாதிரிகளின் தரம் குறித்து உணவு பகுப்பாய்வு கூடங்களில் பகுப்பாய்வு செய்வதாகும்.இப்பணிகளை செம்மையாகவும், துரிதமாகவும் மேற்கொள்ளும் வகையில், உணவு பாதுகாப்புத் துறையில் உணவு பகுப்பாய்வு கூடங்களில் காலியாகவுள்ள இளநிலை பகுப்பாய்வாளர் பணியிடத்திற்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வு நடத்தப்பட்டு. 31 செய்யப்பட்டுள்ளனர்.

 நபர்கள் தெரிவு இளநிலை பகுப்பாய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 31 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

 5 இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு. மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாகு, இ.ஆ.ப., உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் திரு. ஆர். லால்வேனா, இ.ஆ.ப., தேசிய5 நலவாழ்வு குழும இயக்குநர் திரு. அருண் தம்புராஜ், இ.ஆ.ப.. தமிழக கேபிள் டிவி கம்யூனிகேஷன் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் திரு.சு. வெள்ளைசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.