இந்து சமய அறநிலையத்துறை: 25 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி மற்றும்15 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்

0 MINNALKALVISEITHI
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.121.43 கோடி மதிப்பீட்டிலான 25 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.50.79 கோடி செலவிலான 15 முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (17.2.2025) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 121 கோடியே 43 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 16 திருக்கோயில்களில் 24 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு உதவி ஆணையர் அலுவலகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி, 50 கோடியே 79 இலட்சம் ரூபாய் செலவில் 7 திருக்கோயில்களில் 15 முடிவுற்ற திட்டப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்ட செயலாக்கம், 2,608 திருக்கோயில்களில் குடமுழுக்கு, திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல். திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், அன்னதானத் திட்டம் விரிவாக்கம், மலைத் திருக்கோயில்கள் மற்றும் முக்கிய திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைத்தல், புதிய கல்வி நிறுவனங்கள் தொடக்கம், ஒருகால பூஜை திட்டம் விரிவாக்கம், துறையின் செயல்பாடுகளை கணினிமயமாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றத்திலிருந்து இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக சீரிய முறையில் செயல்படுத்தி வருவதோடு, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளும் தொடர்ந்து நிறைவேற்றபட்டு வருகின்றன. 

16 திருக்கோயில்களில் 24 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு உதவி ஆணையர் அலுவலகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுதல் சென்னை, எழும்பூர். அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி: திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒட்டன்சத்திரம், அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டும் பணி; திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரி, அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 16.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணி: சென்னை, கோவில்பதாகை, அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் 13.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுக்கள் காப்பகம் அமைக்கும் பணி: ஈரோடு மாவட்டம், பண்ணாரி, அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் 8.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோயில் வளாகத்தில் மூன்று பொது சுகாதார வளாகங்கள், திருமண மண்டபம் பழுதுபார்த்தல் மற்றும் கூடுதல் கட்டடம் கட்டும் பணிகள்; நாமக்கல், அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் 7.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி: செங்கல்பட்டு மாவட்டம். 

திருப்போரூர், அருள்மிகு கந்தசாமி திருக்கோயிலில் 6.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி; சென்னை, பூங்கா நகர். அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் சார்பில் 4.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய பல்நோக்கு வளாகங்கள் கட்டும் பணிகள்: கன்னியாகுமரி மாவட்டம். வேளிமலை, அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயிலில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி: தேனி மாவட்டம், வீரபாண்டி, அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயிலில் 2.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு பணியாளர் குடியிருப்புகள் கட்டும் பணி: கோயம்புத்தூர் மாவட்டம். இடுகம்பாளையம், அருள்மிகு அனுமந்தராயசுவாமி திருக்கோயிலில் 2.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஐந்து நிலை இராஜகோபுரம் கட்டும் பணி: சென்னை, இராயப்பேட்டை அருள்மிகு பெரியபாளையத்தம்மன் திருக்கோயிலில் 1.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு மண்டபம் கட்டும் பணி: நாமக்கல் மாவட்டம். கொல்லிமலை, அருள்மிகு அறப்பளீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் 1.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணி: 

விழுப்புரம் மாவட்டம். திருவக்கரை, அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயிலில் 1.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்குளத் திருப்பணி: திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலியில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி: மதுரை மாவட்டம், அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் சார்பில் அருள்மிகு சுந்தரராஜா உயர்நிலைப் பள்ளிக்கு 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறை கட்டடம் கட்டும் பணி மற்றும் 1.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோயிலின் கோட்டைச்சுவர் புனரமைக்கும் பணி: மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு, அருள்மிகு சுவேதாரண்யேசுவரசுவாமி திருக்கோயிலில் 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் பணி: என மொத்தம் 121.43 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 24 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு உதவி ஆணையர் அலுவலகக் கட்டடத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். 7 திருக்கோயில்களில் 15 முடிவற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தல் தூத்துக்குடி மாவட்டம். திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 20.50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பொது தரிசன முறை வரிசை (Queue Complex), நிர்வாக அலுவலகக் கட்டடம் மற்றும் கலையரங்கம்; மதுரை மாவட்டம், அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் வண்டிகேட் நுழைவு வாயில் முதல் சோலைமலை முருகன் திருக்கோயில் மற்றும் இராக்காயி அம்மன் திருக்கோயிலுக்கு 9.10 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை, தடுப்புச் சுவர் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள், 2.95 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் வளாக மேற்கு புற கோட்டைச் சுவர் மற்றும் 1.50 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள பெரியாழ்வார் திருவரசு; சென்னை, பூங்கா நகர். அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் 6.75 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அர்ச்சகர் மற்றும் திருக்கோயில் பணியாளர் குடியிருப்புகள். புதிய பல்நோக்கு வளாகம் மற்றும் குடியிருப்பு: விருதுநகர் மாவட்டம், தேவதானம், அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளியசுவாமி திருக்கோயிலில் 3.95 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருக்குளம் திருப்பணி; திருப்பூர் மாவட்டம், அய்யம்பாளையம், அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யனார் திருக்கோயிலில் 2.10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அர்ச்சகர் குடியிருப்பு: 

விழுப்புரம் மாவட்டம், பெருவளூர், அருள்மிகு கோட்டீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் 1.97 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருமண மண்டபம்: கோயம்புத்தூர் மாவட்டம். பூண்டி, அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயிலில் 1.97 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள முடிகாணிக்கை மண்டபம். மருத்துவ மையம் மற்றும் சுகாதார வளாகம்: என மொத்தம் 50.79 கோடி ரூபாய் செலவிலான 15 முடிவற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் திரு.நா.முருகானந்தம், இ.ஆ.ப. சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன். இ.ஆ.ப. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.பி.என்.ஸ்ரீதர். 

இ.ஆ.ப. கூடுதல் ஆணையர் டாக்டர் சி.பழனி. இ.ஆ.ப. தலைமைப் பொறியாளர் திரு.பொ.பெரியசாமி, இணை ஆணையர் (திருப்பணி) திரு.பொ.ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரிலிருந்து மாண்புமிகு மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு.அனிதா ஆர். ராதாகிருஷ்ணன். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.இளம்பகவத், இ.ஆ.ப. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்திலிருந்து மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.காந்திராஜன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.எஸ்.சரவணன், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.