தமிழ்நாட்டில் மாணவர்கள்
மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின்கீழ் ரூ. 2,152 கோடி
நிதியினை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கடிதம்:
கூட்டாட்சித் தத்துவத்தின்
அடிப்படையிலும், இலட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதியும்,
தமிழ்நாட்டிற்கு 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின்கீழ் வரவேண்டிய நிதியினை ஒன்றிய அரசு
உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு, மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (20-2-2025) கடிதம்
எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ முழுமையாக
அமல்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை, தமிழ்நாட்டிற்கான 'சமக்ர சிக்ஷா'
(Samagra Shiksha) திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்பட மாட்டாது” என்று மாண்புமிகு
ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் அவர்கள் சமீபத்தில் தெரிவித்திருப்பது குறித்து தனது
ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இது
தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில்
பெருத்த கவலையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் கல்வி மற்றும் சமூகச் சூழலில், இருமொழிக் கொள்கையானது நீண்ட காலமாக
ஆழமாக வேரூன்றியுள்ளதாகவும், அதனைப் பின்பற்றுவதில் தமிழ்நாடு எப்பொழுதும் உறுதியாக
உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அலுவல் மொழிகள்
விதி, 1976-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, “அலுவல் மொழிச் சட்டம், 1963"-ஐச்
செயல்படுத்துவதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தனது
கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நவோதயா வித்யாலயா போன்ற ஒன்றிய அரசுப் பள்ளிகள்
மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுவதால் தான், தமிழ்நாட்டில் அவை நிறுவப்படவில்லை
என்று குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்த இரு மொழிக் கொள்கை
மற்றும் சமூக நீதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட முற்போக்குக் கொள்கைகளின்
காரணமாக,கடந்த அரை நூற்றாண்டில் தமிழ்நாடு அடைந்துள்ள மகத்தான முன்னேற்றங்கள்
மற்றும் அதற்கு வித்திடும் முன்முயற்சிகளைக் காண முடிகிறது எனவும், எங்கள்
இருமொழிக் கொள்கையில் எந்தவொரு மாற்றமும் கொண்டுவர உத்தேசிப்பது தமிழ்நாட்டிற்கும்,
தமிழ்நாட்டு மக்களுக்கும் பெரிய அளவில் பயனளிக்காது என்பதை மேலே உள்ளவை தெளிவாக
எடுத்துக்காட்டுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதுதவிர, தேசியக் கல்விக்
கொள்கை-2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள சில விதிகள் குறித்து 27.08.2024 நாளிட்ட தனது
கடிதத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் ஆழ்ந்த கவலைகள் முறையாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதோடு, 27.09.2024 அன்று தனிப்பட்ட முறையில் விரிவான
கோரிக்கை மனுவாக மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும்
தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இருப்பினும், பலமுறை கோரிக்கை
விடுக்கப்பட்டும், “சமக்ரா சிக்ஷா” திட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய நிதி ஒன்றிய
அரசால் வழங்கப்படாமல் உள்ளதாக கவலையோடு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிய
அரசின் இரண்டு வெவ்வேறு திட்டங்களான “சமக்ர சிக்ஷா” திட்டத்தையும், தேசிய கல்விக்
கொள்கையைப் பிரதிபலிக்கும் பி.எம்.ஸ்ரீ. (PM SHRI) திட்டத்தையும் ஒன்றாகப்
பொருத்திப் பார்ப்பது என்பது அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்பதைத்
தான் மீண்டும் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,
தற்போது ஒரு மாநிலத்தில், அங்குள்ள காலச் சூழலுக்கேற்ப பின்பற்றப்பட்டு வரும்
கொள்கைகளுக்கு எதிராக, அந்த மாநிலத்தைக் கட்டாயப்படுத்துவதற்கு, நிதி வழங்கும்
விவகாரங்களில் ஒன்றிய அரசு அழுத்தம் தரும் இத்தகைய முயற்சி, கூட்டாட்சித்
தத்துவத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும் என்று தெரிவித்துள்ளதோடு, குறிப்பிட்ட
தேவைகளின் அடிப்படையில் தங்களது கல்விக் கொள்கைகளை வடிவமைக்கும் மாநிலங்களின்
உரிமைகளை பெருமளவில் பாதிக்கும் என்றும் கவலையோடு சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின்கீழ் நிதி
விடுவிக்கப்படாததால், ஆசிரியர்கள் சம்பளம், மாணவர்களுக்கான நலத் திட்டங்களை
உள்ளடக்கிய கல்வி முன்னெடுப்பு முயற்சிகள், கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பயிலும்
வறிய நிலையில் வாழும் மாணவர்களுக்கான கல்வித் தொகையைச் திருப்பிச் செலுத்துதல்
மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கான போக்குவரத்து போன்றவற்றிற்கான பல
முக்கிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர்
அவர்கள், 2கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில், இலட்சக்கணக்கான மாணவர்கள்
மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, இந்த விஷயத்தில் மாண்புமிகு இந்தியப் பிரதமர்
அவர்கள் தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்தத் திட்டத்தின்கீழ்
தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்கப்படாமல் உள்ளதால் ஏற்பட்டுள்ள வருந்தத்தக்க
சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ செயல்படுத்துவதோடு
'சமக்ர சிக்ஷா' திட்டத்தைப் பொருத்திப் பார்க்காமல், 2024-25 ஆம் நிதியாண்டில்
இந்தத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ.2,152 கோடி நிதியினை உடனடியாக
விடுவிக்க மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்
இப்பொருண்மையின் தீவிரத்தை உணர்ந்து, தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்று
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது கடிதத்தில்
வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
Text of the D.O. Letter of Thiru M.K.
Stalin, Hon'ble Chief Minister of Tamil Nadu addressed to the Hon'ble Prime
Minister of India Thiru Narendra Modi, regarding release of Samagra Shiksha
funds for Tamil Nadu I write to express my deep concern over the recent remarks
of the Hon'ble Union Minister for Education indicating that 'Samagra Shiksha'
funds for Tamil Nadu would not be released until the State implements 'National
Education Policy (NEP) 2020' in its entirety and adopts the three-language
policy. This has created immense anxiety and unrest among students, political
parties and the general public in our State. For many decades, Tamil Nadu has
always been steadfast in its two-language policy, which is deeply rooted in our
educational and social milieu.
Hence, the State has been exempted from
implementing "The Official Languages Act, 1963", as mentioned in The Official
Languages Rules, 1976. Even Central schools like Navodaya Vidyalayas, which
follow the three-language policy, have not been established in Tamil Nadu
because of the opposition to it. The tremendous strides made by our State in the
last half century and its trendsetting initiatives can be traced back to our
progressive policy making, built on this two-language policy and social
3justice. The above would clearly exemplify that any change in our two-language
policy is non-negotiable for our State and our people. In addition to this, the
State has also raised its strong concerns on other specific provisions of
National Education Policy, 2020. These concerns were formally communicated in my
letter dated 27.08.2024 and a detailed memorandum was personally submitted to
you on 27.09.2024.
However, despite these multiple representations, the Samagra
Shiksha funds for 2024-25 remain unreleased. I would like to reiterate that
linking the two different Centrally Sponsored Schemes SSA and the NEP exemplar
PM SHRI Schools is fundamentally unacceptable. And the Union Government's usage
of such fund releases as a pressure tactic to coerce a State into adopting
centrally mandated programs against its own time-tested State policies is a
blatant violation of cooperative federalism. This will grossly undermine the
States' rights to shape their own education policies, based on a State's
specific needs. Due to non-release of funds under ongoing scheme, several vital
components towards teacher salaries, student welfare programs, inclusive
education initiatives, RTE reimbursements for underprivileged students and
transport for students in remote areas have been jeopardised.
Therefore, in the
interest of cooperative federalism and welfare of lakhs of students and
teachers, I urge you to intervene in this matter. To dissipate the unrest caused
due to this issue, Rs.2,152 crores of Samagra Shiksha funds for Tamil Nadu for
2024-25 may be released immediately, without linking it to the implementation of
NEP 2020. Considering the sensitivity of the issue, I look forward to your
personal intervention in this regard.