ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி,
கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு 498.80 கோடி ரூபாய் நிவாரணம்!
5,18,783 விவசாயிகள் பயன்பெறுவரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.
ஸ்டாலின் அவர்கள் உத்தரவு
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர்
மாதங்களில் ஃபெஞ்சல் புயலின் காரணமாக வரலாறு காணாத அதிகனமழை பொழிவு ஏற்பட்டு
கடலூர். விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி. கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு
மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, வீடுகள். சாலைகள் போன்ற
உட்கட்டமைப்பு வசதிகள் பெரும் சேதமடைந்து, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களும்
பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு "ஃபெஞ்சல்" புயலை" கடுமையான இயற்கை பேரிடர்" என்று
அறிவித்த்தோடு, தமிழ்நாடு அரசின் வேண்டுகோளுக்கிணங்க, ஒன்றிய அரசும் பெஞ்சல் புயலை
கடுமையான இயற்கை பேரிடராக அறிவித்தது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,
ஃபெஞ்சல் புயலால் பாதிப்பிற்குள்ளான மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு,
ஆய்வு செய்து, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற
உறுப்பினர்கள். துறைச் செயலாளர்கள்.
மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர்
அலுவலர்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்து, போர்க்கால அடிப்படையில்
மேற்கொண்ட துரித மீட்பு நடவடிக்கைகளினால் ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட
மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியது. ஃபெஞ்சல் புயல் காரணமாக கடுமையாக
பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற பல்வேறு
மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண
உதவிகளும், ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உயர்த்தப்பட்ட
நிவாரணமாக 5 இலட்சம் ரூபாய் வழங்கிடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களால் 3.12.2024 அன்று உத்தரவிடப்பட்டு, வழங்கப்பட்டது. மேலும், புயலால்
பாதிப்பிற்குள்ளான உட்கட்டமைப்புகளை உடனடியாக சீரமைக்க பல்வேறு துறைகளுக்கு 80 கோடி
ரூபாய் மாநில பேரிடர் நிவாரண