மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்
திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் ரூ.1.61 கோடி
மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட பிரத்யேக மரப்பலகைகளாலான பாதையை
திறந்து வைத்து, மணலில் செல்லும் பிரத்யோக சக்கர நாற்காலியினை தள்ளிச்சென்று,
மாற்றுத்திறனாளிகள் கடலில் கால்நனைத்து அடைந்த இன்பத்தை கண்டு மகிழ்ந்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திருஉதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று
(11.2.2025) அடையாறு மண்டலம், பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரைக்கு பொதுமக்களைப்
போலவே மாற்றுத்திறனாளிகளும் சென்று கடலினைக் கண்டு மகிழ்ந்திடும் வகையில் ரூ.1.61
கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட பிரத்யேக மரப்பலகைகளாலான பாதையை மாற்றுத்திறனாளிகளின்
பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியல் மணலில் செல்லும்
பிரத்யோக சக்கர நாற்காலியினை தள்ளிச்சென்று, மாற்றுத்திறனாளிகள் கடலில் கால்நனைத்து
அடைந்த இன்பத்தை கண்டு மகிழ்ந்தார். பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம்,
பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் பொதுமக்களைப்போலவே மாற்றுத்திறனாளிகளும்
கடற்கரைக்கு சென்று கடலினைக் கண்டு மகிழ்ந்திடும் வகையில் சிங்கார சென்னை 2.0
திட்டத்தின் கீழ், ரூ.1.61 கோடி மதிப்பில் மரத்தாலான பாதை அமைக்கும் பணியானது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 12.8.2024 அன்று தொடங்கி
வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்தப் பாலம் 190 மீ.நீளம், 2.80 மீ.அகலத்துடன்
சிகப்பு மெரண்டி, பபூல் மற்றும் பிரேஸ்லியன் ஐ.பி.இ. மரப்பலகைகளால் அமைக்கப்பட்டது.
மாற்றுத்திறானாளிகளின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட பிரத்யேக மரத்தாலான பாதையினை
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று
திறந்து வைத்தார். பிரத்யேக பாதையில் மாற்றுத்திறனாளிகளுடன் உடன் சென்ற மாண்புமிகு
தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான மணலில் செல்லும்
பிரத்யோக சக்கர நாற்காலியினை தள்ளிச்சென்று, மாற்றுத்திறனாளிகள் கடலில் கால்நனைத்து
அடைந்த இன்பத்தை கண்டு மகிழ்ந்தார்.
ஏற்கனவே, மெரினா கடற்கரையில்,
மாற்றுத்திறனாளிகள் கடலினைக் கண்டு மகிழ்ந்திடும் வகையில், ரூ.1.14 கோடி மதிப்பில்
மரத்தாலான கடலினை அணுகும் பாதையானது கடந்த 27.11.2022 அன்று திறந்து வைக்கப்பட்டு
பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு நகராட்சி
நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள்
நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும்
அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்
திருமதி ஆர்.பிரியா, துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி
ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர் (பணிகள்)
திரு.நே.சிற்றரசு, மண்டலக் குழுத் தலைவர் திரு.ஆர்.துரைராஜ், துணை ஆணையாளர்
(பணிகள்) திரு.வி.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப. தெற்கு வட்டார துணை ஆணையாளர்
திரு.எம்.பி.அமித், இ.ஆ.ப., மாமன்ற உறுப்பினர் திருமதி ம.ராதிகா, மற்றும் மாமன்ற
உறுப்பினர்கள். மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.