2025-ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது,
2024-ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது,
பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது,
தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது.
முத்தமிழறிஞர் கலைஞர் விருது உள்ளிட்ட பத்து விருதுகள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்
விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று
(15.1.2025) தலைமைச் செயலகத்தில், திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ்
வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் மொழிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச்
சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்களுக்கு
2025-ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது, 2024-ஆம்
ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது,
மகாகவி பாரதியார் விருது. பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த் தென்றல்
திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது,
முத்தமிழறிஞர் கலைஞர் விருது, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்
மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தந்தை பெரியார் விருது மற்றும்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் டாக்டர் அம்பேத்கர்
விருது ஆகிய பத்து விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.
தமிழ்ப் புலவர்களையும், தமிழறிஞர்களையும் பெருமைப்படுத்தும் வகையில்,
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தைத்திங்கள் இரண்டாம் நாளை
திருவள்ளுவர் திருநாள் எனக் கடைப்பிடிக்க ஆணையிட்டார்.
முத்தமிழறிஞர்
கலைஞர் அவர்களின் பெருமுயற்சியால் தொன்மையும், இலக்கிய வளமும்
நிறைந்த தமிழ் மொழியானது 2004-ஆம் ஆண்டு ஒன்றிய அரசால்
செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் சென்னையில் வள்ளுவர்
கோட்டம் உருவாக்கப்பட்டதோடு, கன்னியாகுமரியில் 133 அடி உயர அய்யன்
திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால்
கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி
விழாவையொட்டி கடந்த டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் தமிழ்நாடு
அரசின் சார்பில் வெள்ளி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு, அய்யன்
திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி
இழைப் பாலம் திறப்பு விழா, திருக்குறள் நெறி பரப்பும் 22
தகைமையாளர்களுக்குச் சிறப்புப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள்
வழங்குதல், அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளிவிழாச் சிறப்பு
மலர் வெளியீடு, திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ,
2
மாணவியர்க்குப் பரிசுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள்
நடைபெற்றன.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசும்,
தமிழறிஞர்களையும், தமிழ்ச் சான்றோர்களையும் சிறப்பிக்கும் விதமாக, மகாகவி
பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் நாள், அரசின் சார்பில்
ஆண்டுதோறும் 'மகாகவி நாளாக' கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்து
செயல்படுத்தி வருகிறது. தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும்
வகையில், "இலக்கிய மாமணி விருது" என்ற புதிய விருது தோற்றுவிப்பு,
ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள். மாநில இலக்கிய
விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது
விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக கனவு இல்லம் வழங்கும்
திட்டம்.
தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை போன்ற பல்வேறு
திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது.
சிறப்பிக்கும் வகையில்,
அந்த வகையில், தமிழறிஞர்களை
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2025-ஆம் ஆண்டுக்கான
திருவள்ளுவர் விருது செந்தமிழ்ச் செம்மல் பெரும் புலவர்
மு. படிக்கராமு அவர்களுக்கும், 2024-ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா
விருது திரு. எல். கணேசன் அவர்களுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும். முன்னாள் ஒன்றிய
அமைச்சருமான திரு.கே.வி. தங்கபாலு அவர்களுக்கும், மகாகவி பாரதியார் விருது
கவிஞர் கபிலன் அவர்களுக்கும்.
பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிதைப்
பேரொளி பொன். செல்வகணபதி அவர்களுக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க.
விருது மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் அவர்களுக்கும், முத்தமிழ்க் காவலர்
கி.ஆ.பெ. விசுவநாதம் விருது திரு. வே.மு,பொதியவெற்பன் அவர்களுக்கும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி, சிறப்பித்தார்.
இவ்விருதுகளைப் பெறும் விருதாளர்களுக்கு விருதுத்தொகையாக தலா இரண்டு
இலட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுணர
வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.
மேலும்,
பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2024-ஆம் ஆண்டிற்கான
தந்தை பெரியார் விருது திரு. விடுதலை இராஜேந்திரன் அவர்களுக்கும்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2024-ஆம்
ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருது நாடாளுமன்ற உறுப்பினர்
திரு. து. இரவிக்குமார் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
3
அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.
இவ்விருதுடன் விருதாளர்களுக்கு விருதுத்
தொகையாக தலா 5 இலட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும்
தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.
முத்தமிழறிஞர் கலைஞர் விருது
முத்தமிழறிஞர் கலைஞர்
அவர்களின்
தமிழ்த் தொண்டினைப்
அடியொற்றி தமிழுக்குத்
போற்றும்வகையில் முத்தமிழறிஞர் கலைஞர்
தொண்பற்றும் ஒருவருக்கு வழங்கும் வகையில் "முத்தமிழறிஞர் கலைஞர்
விருது" 2024-இல் தோற்றுவிக்கப்பட்டு. முதன் முறையாக இவ்விருது திரு.
முத்து வாவாசி அவர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் விருதுடன், விருதுத்
தொகையாக பத்து இலட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை
வழங்கி, பொன்னாடை அணிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி
ஸ்டாலின், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.
மு.பெ. சாமிநாதன், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.
சிவ.வீ. மெய்யநாதன், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
மருத்துவர்
மதிவேந்தன்.
மா.
தலைமைச்
செயலாளர்
திரு.நா.முருகானந்தம்,5.ஆப, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்
மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் திரு. சி. விஜயராஜ்
குமார், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு. வே.
ராஜாராமன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா.
வைத்திநாதன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள்
மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
அரசின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள:
Indiprnews tndiprtndipr TN DIPR www.dipr.tn.gov.in | TNDIPR, Govt.of Tamil Nadu
