3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்
ட்ரோன் பயிற்சி
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் ட்ரோன் பயிற்சி வரும் 28.04.2025 முதல் 30.04.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் ட்ரோன் விதிமுறைகள் 8 விமான அடிப்படைகள் கண்ணோட்டம், ட்ரோன் வகைகள் & செயல்பாடுகள் பராமரிப்பு அவசரநிலைக் குறிப்புகள் சிமுலேட்டர் மற்றும் நடைமுறைப் பயிற்சியின் கருத்து மற்றும் அசெம்பிளிங் ப்ளைட் கன்ட்ரோலர் சென்சார் அளவுத்திருத்தம், & கண்காணிப்பு & மேப்பிங் ஒருங்கிணைப்பு. ACT மற்றும் ரேடியோ டெலிபோனிக் போன்றவை கற்றுத்தரப்படும். அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.
இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல். சென்னை 600032.
முன்பதிவு அவசியம்: 9360221280 / 9543773337
அரசு சான்றிதழ் வழங்கப்படும்